Saturday, May 4, 2024 02:05 am

Subscribe to our YouTube Channel

278,000SubscribersSubscribe
Homeதமிழ்நாடுநாமக்கல்லில் இன்று நடக்கும் கூட்டத்திலும் தாக்குதல் நடத்த திட்டமா?

நாமக்கல்லில் இன்று நடக்கும் கூட்டத்திலும் தாக்குதல் நடத்த திட்டமா?

சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்

கல் குவாரி தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் – குவாரியில் நடக்கும் விபத்து என்ற பெயரில் கொலைகள், குவாரி உரிமையாளர்களால் நடத்தப்படும் படுகொலைகள் தொடர்ந்து அம்பலப் படுத்தப்பட்டு வரும் நிலையில்….

09-02-2023 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு அக்கலாம்பட்டி 1 கல்குவாரி, மாலை 03.00 மணிக்கு கோக்கலை 4 கல்குவாரிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், 5 கல் குவாரி அமைப்பதற்காக ,
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக இணைப்பு கூட்ட அரங்கில், (கோக்கலை சிவக்குமார், ராஜா, ராமாயி, பழனிச்சாமி என4 கல்குவாரி -அக்கலாம்பட்டி செல்வராஜ் கல்குவாரி ) அமைப்பதற்கான
கருத்து கேட்பு கூட்டம் , நடைபெற உள்ளது.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்,சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர். சண்முகம் -விஜயன், பூசன், சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், தோழர். பொன்னரசு, குன்னமலை குழந்தைவேல், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச்செயலாளர் முனைவர் .குணசேகரன், சூழலியல் செயல்பாட்டாளர் மோகன்ராஜ்-
கொ. நாகராஜன், லா பவுண்டேஷன் வாசுதேவன், சாமானிய மக்கள் நலக்கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் தியாகராஜன்
உள்ளிட்ட பல்வேறு அமைப்பு தோழர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், தொடர்ந்து அடக்குமுறைக்கு அஞ்சாது சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக போராடி பல்வேறு நிலைமைகளை மாற்றி வரும் கோக்கலை ஊர் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

கடந்த ஓராண்டாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் தொடர் செயல்பட்டால் தற்போது திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலிருந்த 64 +18= 82 கல்குவாரிகளும் முறைகேடாக இயங்குகிறது என்று உயர் நீதிமன்றமே அனைத்தையும் மூடி, தவறுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியில் இயங்கிய 54 குவாரிகளும் சட்ட விரோதமாக இயங்குகிறது என்றும் 19 கல் குவாரிகள் இயங்க தகுதியில்லை என்றும் மற்ற குவாரிகளுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும், அனைத்து குவாரிகளும் முறைகேடுகள் இருக்கிறது என்று அரசு அமைக்க குழுவின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தங்களது 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், எண்ணற்ற முறைகேடுகள் நடந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் கிரானைட் குவாரிகளை இனி அரசே ஏற்று நடத்தும் என தெரிவித்திருந்த நிலையில்* நாமக்கல்லில் கல் குவாரிக்காக கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சட்டவிரோத கல்குவாரிகளை கடுமையாக ஆதாரபூர்வமாக எதிர்ப்பதாலும், அதனை ஆதாரபூர்வமாக பொதுவெளியில் முன் வைப்பதாலும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கு, நாமக்கல்- மரப்பரை;
கரூர்-பரமத்தி காட்டு முன்னூர், கோவை – கிணத்துக்கடவு 10 முத்தூர் உள்ளிட்ட பல இடங்களில், கொலை மிரட்டல், உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், தாக்குதல் முயற்சிகள் குவாரி உரிமையாளர்களாலும் அவர்களது அடியாட்களாலும் ஏற்பட்டது.

சென்ற மாதம் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்பாகவே, கொண்டம நாயக்கன்பட்டி கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் கல்குவாரி உரிமையாளர்களால் அழைத்து வரப்பட்ட அடியாட்களால், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் அவர்கள் தாக்கப்பட்டார்.

கரூரில் நான்கு மாதம் முன்பு விவசாயி ஜெகநாதன் குவாரி உரிமையாளர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

சில மாங்களுக்கு முன்பு கூட ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், எக்கட்டாம் பாளையம் கிராமத்தில் உள்ள கல்குவாரி முறைகேடுகளை எதிர்த்து ஆதாரத்தோடு முன்வைத்து வந்த தமிழ்ச்செல்வன் என்பவர், குவாரி உரிமையாளர்கள் ஏவிவிட்ட கூலிப்படையால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு உயிர்தப்பி சிகிச்சை பெற்றார்.

அனைத்து மாவட்டங்களிலும், கடந்த பல ஆண்டுகளாக மிகப்பெரும் சட்டவிரோதமாகவும், சுற்றுச்சூழலை பாதித்தும் குவாரி நடத்தி வரும் கல்குவாரி உரிமையாளர்களால், இன்றைய கோக்கலை – அக்கலாம்பட்டி கல் குவாரிக்காக நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத அவல நிலையே உள்ளது.

எனவே அனைத்து பத்திரிக்கையாளர்களும்/காட்சி ஊடக நண்பர்களும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்கு நடக்கும் உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ந.சண்முகம்,
தோழர் பூசன்,
தோழர். குழந்தைவேலு
ப. பொன்னரசு
சு.விஜயன்,
ஒருங்கிணைப்பாளர்கள்,
சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்

97919- 78786
73734 – 53038

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments