Sunday, April 28, 2024 12:04 am

Subscribe to our YouTube Channel

277,000SubscribersSubscribe
Homeஅரசியல்மனுஸ்மிருதியும் இந்திய நீதித்துறையும்!

மனுஸ்மிருதியும் இந்திய நீதித்துறையும்!

இன்றைய இந்து மதத்தின் புனித நூலாக அறியப்படும் தர்மசாஸ்திரங்களில் ஒன்றான மனுஸ்மிருதியானது தொடக்கத்தில் ஆதி சங்கரரை தலைமையாக கொண்ட ஸ்மார்த்த பிராமணர்களால் மட்டுமே கடைபிடிக்கப்பட்டது அல்லது ஸ்மார்த்த மதத்தின் முக்கிய தர்ம சாஸ்திர நூலாக மட்டுமே இருந்து வந்தது. அது எவ்வாறு கட்டமைக்கப்பட்ட இந்து மதத்தின் புனித நூலாக மாறியது என்பது குறித்த பதிவுகளை ஏற்கனவே எழுதியிருந்தேன். (அதன் சுட்டி மறுமொழியில்)

இப்பதிவில் மனுஸ்மிருதி கூறும் தர்மங்களும் அது இன்றைய நீதித்துறைகளில் அங்கீகரிக்கப்படுவதையும் அதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் பார்ப்போம்.

முதலில் மனுஸ்மிருதி என்பது ஒவ்வொரு காலத்திற்கும், அந்தந்த பிராந்தியத்திற்கும், அதனை ஆண்ட அரசுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று மாறுபட்டு தான் கிடைத்தது. அவையனைத்தும் ஒரே நூலாக தொகுக்கப்பட்டது ஆங்கிலேயர் காலத்தில் தான்.

அப்படி தொகுக்கப்பட்ட அந்நூலை கொண்டே ஆங்கிலேயர் காலத்தில் நீதித்துறை செயல்பட்டது. தீர்ப்புகளையும் வழங்கியது. பின் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு தான் பழைய ‘மனுநீதி’ முறை ஒழிக்கப்பட்டது.

மதசார்பற்ற அரசியலமைப்பு சட்டமானது சாதி,பாலின, வர்ணபேதங்களையும் அனைவருக்கும் சம உரிமையையும், மனிதத்தன்மைமிக்க வகையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நீதியையும் தண்டனையையும் கொண்டு வந்தது. இப்படி தடாலடியாக வேறு கோணத்திற்கு மாறிய நீதித்துறை முற்றிலும் பழைய நடைமுறையை விட்டுவிட்டதா? என்றால் அது தான் இல்லை.

1950 முதல் 2019 வரை இந்தயாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களும் (Especially Madras, Bombay & Allahabad) உச்சநீதிமன்றமும் இதுவரை 38 முறை மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி அதன்வழியே தீர்ப்பு கூறியிருக்கிறது. இந்த 38 முறையில் 26முறை (கிட்டத்தட்ட 70%) கடந்த பத்தாண்டுகளில் வழங்கப்பட்டது என்பது தான் அதிர்ச்சிகரமான உண்மை.

இந்துத்துவா இந்தியா முழுக்க வேரூன்றிய வரலாற்றையும் இதனுடன் இணைத்து கவனிக்க வேண்டியது அவசியமானது. அதேசமயம் 1989 முதல் 2019 வரை கடந்த 20 ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் மட்டும் 7 முறை மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் உச்சநீதிமன்றம் மனுஸ்மிருதியை குறிப்பிட்டது 1989ல் தான் (Supreme court judgement passed Date 22.12.1989. Vimla Bai v. Hiralal gupta {[1990] 2SCC 22}. அவ்வழக்கில் உச்சநீதிமன்றம் மனுஸ்மிருதியை குறிப்பிட்டாலும் மனுநூலுக்கு முரணான தீர்ப்பே வழங்கப்பட்டது. இதுபோல் மூன்று முறை மட்டுமே மனுநூல் மேற்கோள் காட்டப்பட்டும் அதன் வழியே தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்துள்ளது. ஏனைய 35 வழக்குகளிலும் மனுநூலின் வழியேதான் ‘நீதி’ கிடைத்திருக்கிறது. அப்படியான வழக்குகளில் சில வழக்கின் ‘நீதிகளை’ மட்டும் பார்ப்போம்.

6.8.2008ல் உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றில் (Rajbir singh dalal v. Chaudhari Devilal Lal university, Sirsa & Anr. (2008) 9SCC 284) ஜைமினியின் பூர்வ மீமாம்சம், மனுஸ்மிருதி, சங்கராச்சாரியார் போன்றோர் எல்லாம் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவ்வழக்கில் இறந்த பெண்ணின் சொத்துக்கள் அவரது கணவருக்கு உரித்தானதா அல்லது பெற்றோருக்கு உரித்தானதா எனும் சிக்கலுக்கு மீமாம்ச வழியில் மனு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில்,

“Of women married according to the Brahma, Daiva, Arsha, Gandharva, Prajapatya form, the property shall go to her husband if she dies without issue. But her property, given to her on marriage in the form called Asura, Rakshasa and Paisacha, on her death, shall become property of her parents.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (இவ்வகையான திருமணங்கள் குறித்த மேலதிக தகவலுக்கு மறுமொழியில் காண்க) இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியவரில் ஒருவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ என்பது கவனிக்கத்தக்கது.

இதேபோல் 2009ஆம் ஆண்டு கேரளாவின் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு (Kerala High Court (VV Verghese v. The Kerala State Election Commission & Anr. 2009 SCCOnline Ker 2541)) இந்திய ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பானது. அதில் கிராம சபை பஞ்சாயத்துகள் குறித்த ‘தகுதிகள்,ஒழுக்கங்கள்’ விவாதிக்கப்படும்போது ரிக் வேதத்தின் ‘சபா’, ‘சமிதி’ போன்றவையும் இராமாயணமும் மகாபாரதமும் மனுஸ்மிருதியும் மேற்கோள் காட்டப்பட்டு அதுவே இந்திய ஜனநாயகத்தின் தகுதியாகவும் ஒழுக்கமாகவும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் 2012ல் கர்நாடகத்தின் பட்டியலின மக்களுக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான வழக்கு ஒன்றில் Justice Vikramjit Sen (as he then was), in GM Venkatareddy v. Deputy Comm., Kolar (2012 SCC OnLine Kar 7533) மனுஸ்மிருதி 8.149 மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அது கூறுவதாவது, “A pledge, a boundary, the property of infants, an (open) deposit, a sealed deposit, women, the property of the King and the wealth of a Srotriya are not lost in consequence of (adverse) enjoyment”. இவ்வழக்கு நிலம் சம்பந்தப்பட்டது தான் என்றாலும் மேற்கோள் காட்டப்பட்ட ஸ்லோகத்தில் பெண்களை மிகவும் அவமதித்திருப்பது நோக்கத்தக்கது. இவ்வரியினையும் சேர்த்தே நீதித்துறை ஆமோதிக்கிறது என்று தானே பொருளாகிறது?

இதேபோல் 2014ல் கர்நாடக நீதிமன்றம் ஒரு வழக்கிற்கு (Mehrunnisa v. Syed Habib 2014 SCC OnLine Kar 11926) மனுஸ்மிருதி 9.3ஐ மேற்கோள் காட்டுகிறது. அது முழுக்க முழுக்க ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. அதாவது
‘The father guards her during virginity, the husband guards her in youth, the sons guard her in old age; the woman is never fit for independence.’

இந்த வரியினை தான் சமீபத்தில் டாக்டர் தொல்.திருமாவளவன் மேற்கோள் காட்டி பேசியிருந்தார். அவரது காணொளியின் ஒருபகுதி மட்டும் வெட்டப்பட்டு தற்போது சமூகவலைதளங்களில் சுழன்றுக்கொண்டிருக்கிறது. அவர் கூறிய அதே வரிகள் நீதிமன்றத்தின் தீர்ப்புகளிலேயே வந்துள்ளது வருந்தத்தக்கது.

இதைவிட கொடூரம் இந்த வழக்கை போட்டது இஸ்லாமிய பெண். ஒரு இஸ்லாமிய பெண்ணின் வழக்கிற்கு இந்து மதத்தின் புனிதநூல் வழியே நீதி வழங்கப்பட்டிருப்பதை காட்டிலும் ஒரு கொடூரம் வேறெந்த மதசார்பற்ற நாட்டிலாவது நடக்குமா? சிறுபான்மையினருக்கு எதிரான இந்துத்துவ அமைப்புகளின் வழியே இந்தியா ஒரு இந்து நாடு எனும் கட்டமைப்புக்குள் நீதித்துறையும் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சிறந்த உதாரணத்தினை தரமுடியும்?

அடுத்து கவுகாத்தி நீதிமன்றம் அப்பா-மகன் இடையிலான ஒரு வழக்குக்கு (Das V.Das 2016 SCC Online Gau 709) மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டியுள்ளது.

Paragraphs 12 and 13 of the last mentioned Gauhati High Court Judgment of 2016.

“In Hindu law, inheritance is linked with spiritual responsibility. A son has pious liability to discharge debts of his father and so he has right to inherit his assets. Conversely, inheritance presupposes existence of spiritual liability. A son absolves a father from his liability of debt and consequently fosters his spiritual upliftment by emancipating from hell called “Pu” and this is the reason according to Manusmriti for coinage of the word “Putra”. For reference one can have a look at verse No. 135 of Chapter IX of Manusmriti which is quoted below:

“Pu Namno Narakachhsmattrayte Pitaram Sutah
Tasmatputra Iti Proktah Swaymeva  Swayamvut”

The meaning of the above shloka is that one who salvages someone from the hell called ‘pu’ is called as ‘putra’. This is because it is the ‘putra’ alone who gives oblation after death of a Hindu for salvation of his soul. Under such circumstances, a person can pay oblation for one father only. This is why when adoption takes place, the adopted son can no longer pay oblation for his biological father. The result is that all spiritual relationships with his biological parents get snapped the moment a child is given in adoption to somebody else. The adoptive father becomes the father not only for religious purposes but also for other incidents of life including inheritance.”

இவ்வழக்கில் இன்னொரு கொடுமையான விடயமென்னவென்றால் 1915ல் நடைபெற்ற ஒரு வழக்கை இதில் மேற்கோள் காட்டுகிறார்கள். அவ்வழக்கு பாலகங்காதர திலகருக்கும் ஶ்ரீநிவாஸ் பண்டிதருக்கும் நடந்த வழக்கு (Balgangadhar Tilak v. Sreenivas Pandit AIR 1915, PC 7) இதில் ‘கோத்திரம்’ குறித்த விவாதம் நடந்திருக்கிறது. சாதி-வர்ண ரீதியான கட்டமைப்புக்கு காரணமாகவும் அதன் அடிப்படையாகவும் அறியப்படும் ‘கோத்திரம்’ அவ்வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் ‘சூத்திரர்களுக்கு கோத்திரம் இல்லை’ என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் ஒருபடிமேலாக 1976ல் உத்தரபிரதேசத்தில் ஒரு தீர்ப்பில் Kushma v. Baldeo etc ( 1975 SCC OnLine BoR (UP) 53)  மனுஸ்மிருதி குறிப்பிடும் நால்வர்ண பெயர்களை அப்படியே மேற்கோள் காட்டி வழங்கியிருக்கிறது.

2018 மற்றும் 2019ல் இருவழக்குகள் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவது குறித்து உச்சநீதிமன்றத்தில் 5பேர் கொண்ட அமர்வில் தொடரப்பட்டது. அவ்விரு வழக்கிலும் பெண்கள் குறித்து மனுஸ்மிருதி கூறும் தர்மங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவை,

1.Joseph Shine v. Union of India ((2019) 3 SCC 39 and (2018 SCC OnLine SC 1676)
2.Indian Young Lawyers Association & Ors.  ((2019) 11 SCC 1)

இதையெல்லாம் விடவும் ஒரு கொடுமை இராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நீதிமன்றம் முன்பு நடந்தது. அந்நீதிமன்றத்தின் முகப்பில் ‘மனு’ வின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் குப்பையில் தூக்கி போட்டால் கூட அது குப்பைக்கு அவமானமாகும் ஒரு மனிதத்தன்மையற்ற தர்மங்களை கூறும் ஒரு நூல் நாம் நம்பும் உச்சநீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது பாருங்கள். அதுவும் மதசார்பற்ற நாடு என சொல்லிக்கொள்ளும் ஜனநாயக நாட்டில், வர்ணாசிரம தர்மத்திற்கும் சாதி ரீதியான கட்டமைக்கப்பட்ட தீண்டாமைக்கு முழு முதற்காரணமான மனுஸ்மிருதியை அங்கீகரித்து வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிராக எந்த நீதிமன்றத்தின் கதவினை தட்ட முடியும்? அப்படியே தட்டினாலும் மீண்டும் அதே மனுஸ்மிருதியில் இருந்தல்லவா அதற்கும் ‘நீதி’ வழங்கப்படும்?

1927, டிசம்பர் 25 அன்று மனுஸ்மிருதி பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கரால் எரிக்கப்பட்டது. அவரே இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை இயற்றினார். ஆனால் அந்த சட்டத்தையும் மீறி மனுஸ்மிருதியே மீண்டும் ‘நீதி’களை வழங்குகிறது என்றால் இது உண்மையிலேயே மதசார்பற்ற ஜனநாயக நாடுதானா? எனும் சந்தேகம் எழுகிறது. இந்துராஷ்ட்ரா நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் அதன் நிறுவனரான சாவர்க்கரும் ஒருபோதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மாறாக மனுஸ்மிருதியை வலியுறுத்தி சட்டத்திருத்தம் கொண்டுவர எத்தனிப்பவர்கள். சாவார்க்கர் இதுகுறித்து எழுதியதாவது,

‘Manusmriti is that scripture which is most worship-able after Vedas for our Hindu Nation and which from ancient times has become the basis of our culture-customs, thought and practice. This book for centuries has codified the spiritual and divine march of our nation. Even today the rules, which are followed, by crores of Hindus in their lives and practice are based on Manusmriti. Today Manusmriti is Hindu Law…’ – [VD Savarkar, ‘Women in Manusmriti’ in “Savarkar Samagar” (collection of Savarkar’s writings in Hindi), Prabhat, Delhi, vol 4, p 415.]

விக்கி கண்ணன்

Original source : Manusmriti and Judiciary – A Dangerous Game by Atindriyo Chakraborty

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments